எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் ஃபஸ்ட் லுக் வெளியிட அஜித்தால் மட்டுமே முடியும்- பிரபல நாயகி

தீரன் பட புகழ் வினோத் இயக்கத்தில் தயாராகி வருகிறது அஜித்தின் 59வது படம். இனி அப்படி கூறுவதற்கு பதிலாக நேர்கொண்ட பார்வை என அழைக்கலாம்.

ஏனெனில் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே படக்குழு ஃபஸ்ட் லுக் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளனர். இப்போது ஃபஸ்ட் லுக்கிற்கு பிரபலங்கள் பலரும் தங்களது கமெண்ட்டுகளை கொடுத்து வருகின்றனர்.

அதில் நடிகை ஸ்ரீதிவ்யா, எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் ஃபஸ்ட் லுக், அஜித் மட்டுமே யோசிக்க முடியும், இந்த குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று பதிவு செய்துள்ளார்.

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares